தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 5) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
;இதுகுறித்து தூத்துக்குடி நகர மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் செ. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி கொம்புகாரநத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இதனால், வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி. தளவாய்புரம், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கல்லன்பரம்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழ தட்டப்பாறை, கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ். கைலாசபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.