தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.16, 25, 26ல் மதுக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.16, 25, மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் பார்களை மூடவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில், திருவள்ளுவர் தினம் (16.01.2024), வடலூர் இராமலிங்கர் நினைவு தினம் (25.01.2024) மற்றும் குடியரசு தினம் (26.01.2024) ஆகிய தினங்களில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் எப்.எல்2, எப்.எல்3  உரிமதலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். 

மேற்குறிப்பிட்ட தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ் நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.