TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு மையம் மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருந்த TNPSC AE நடைபெறும் மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் உரிய நேரத்திற்குள் தேர்வு கூடத்தில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 369 ஒருங்கிணைந்த பொறியாளர் (AE) பணிக்கான தேர்வு ஜனவரி 6 & 7 ஆம் தேதி நடைபெறும் என TNPSC தேர்வாணையம் கடந்த வருடம் அறிவித்தது. கால அட்டவணைப்படி தேர்வானது நாளை (ஜன.06) நடைபெற உள்ள வேளையில் தற்போது தேர்வு மையத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருந்த TNPSC AE தேர்வானது கோவில்பட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் கே.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் எனவும் அதன் பின் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என TNPSC தேர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.